யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் இவ்வாரம் மே 21 முதல் 26 வரை மருத்துவக் கண்காட்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயனுள்ள வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கண்காட்சியை குடாநாடு மட்டுமன்றி வன்னிப்பெருநிலப் பரப்பிலிருந்தும் பாடசாலை மாணவர்கள் பெருமளவில் வந்து பார்த்துப் பயன்பெற்றுச் சென்றுள்ளார்கள்.
நோய்கள், அவை தொடர்பான விழிப்புணர்வுகள், சமூகத்தில் எம்மைச் சுற்றி நடைபெறும் சம்பவங்கள், அவற்றை எதிர்கொள்வதற்கான அறிவூட்டல்கள் என்று பல்வேறு விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. மருத்துவக் கல்வியையும் அதனோடு இணைந்த கல்விநெறியையும் பயிலும் மாணவர்களுக்கும் மிகப்பயனுள்ளதாக இக்கண்காட்சி அமைந்திருந்தது.
அவற்றிலிருந்து ஒரு சில ஒளிப்படங்கள்
பதிவும் படங்களும் – சித்திராங்கன்.
பதிவும் படங்களும் – சித்திராங்கன்.